|
|


யாழ்வாணன்
|
சிறுகதைகள் |
| யாழ்வாணன்....... 'ஆயிரத்தில் ஒருவர்' |
|
அவரது உழைப்பும் உறுதியும் சகிப்புத்தன்மையும்,பொறுமையும்,பாசமும் ..என் உதிரத்தில்
கலந்திருந்து, என்னை உதிர்ந்து போகாமல் காப்பாற்றுகின்றன......உயர வைத்துக்
கொண்டிருக்கின்றன. எனது நண்பன் - சுரதா யாழ்வாணன் நான் தனியன் - சுரேஷ் யாழ்வாணன் யாழ்வாணன், எனது கண்கள், உமது பார்வை, எல்லாம் வெல்லலாம்.... |
ஈழத்து இல்க்கிய உலகில் "யாழ்வாணன்" என்ற பெயர் நன்கு புகழ் பெற்றது. நகர மண்டபக் காப்பாளராக அவா கடமையாற்றும் யாழ்ப்பாண மாநகர சபை அலுவலகத்தில்கூட நா.சண்முகநாதனிலும் பார்க்க யாழ்வாணனே முக்கியமானவர். யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கியவர்களுள் யாழ்வாணனும் ஒருவர். தொடக்க காலத்திலிருந்தே அதன் செயலாள்ராகப் பணிபுரிந்து வருகிறார். யாழ் இலக்கிய வட்டத்தின் வளர்ச்சிக்கான காரணங்களுள் அவரது அயராத அடக்கமான உழைப்பு மிகவும் முக்கியமானதொன்று. யாழ்வாணன் அவர்கள் சுகாதாரப் பகுதியினரால் வெளியிடப்பட்ட 'சுகாதார ஒலி' என்ற பத்திரிகையின்
ஆசிரியர். 1968ஆம் ஆண்டு நடைபெற்ற சுகாதார - குடி நல வார விழாக் குழுவின் செயலாளராகக்
கடமையற்றியதுடன் 'எழில்மிகு யாழ்ப்பாண்ம்' என்ற வாடா மலரையும் வெளியிட்டு அறிஞர்
பெருமக்களின் பாராட்டுதல்களையும் அவர் பெற்றுள்ளார். |
|
bravenet.com